கலங்கின நேரங்களில்
கைதூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில்
என்னோடு இருப்பவரே
உறவுகள் மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும்
நீர் மட்டும் மாறவில்லை
நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை
தேவைகள் ஆயிரம்
இன்னும் இருப்பினும்
சோர்ந்துபோவதில்லை
என்னோடு நீர் உண்டு
தேவையைக் காட்டிலும்
பெரியவர் நீரல்லோ
நினைப்பதைப் பார்க்கிலும்
செய்பவர் நீரல்லோ
நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை
மனிதனின் தூஷணையில்
மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கமுண்டு
தோல்விகள் எனக்கில்லை
நாவுகள் எனக்கெதிராய்
சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு
ஒருபோதும் கலக்கமில்லை
நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை
Song Description: Tamil Christian Song Lyrics, Kalangina Nerangalil - கலங்கின நேரங்களில்.
KeyWords: Christian Song Lyrics, John Jebaraj. Kalangina Nerangalil lyrics.